உள்ளூர் செய்திகள்

முகப்பேர் அருகே பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் மண்டை உடைப்பு

Published On 2022-12-31 08:53 GMT   |   Update On 2022-12-31 08:53 GMT
  • மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்:

முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது42). இவர் பன்னீர் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினார். அப்போது அங்கிருந்த வாலிபர்களுக்கும் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.

இதில் மண்டை உடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News