உள்ளூர் செய்திகள்

பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தி 3 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை- ஆசிரியர் கைது

Published On 2022-08-14 05:31 GMT   |   Update On 2022-08-14 05:31 GMT
  • ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார்.
  • பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் தன்னிடம் படித்த 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்தார். இதே போல் பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் 3 பேரும் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்கு செல்ல மறுத்தனர். இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிமாறன் செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

இதுபற்றி 3 மாணவிகளின் பெற்றோரும் ஆசிரியர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மணிமாறன் 3 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மணமாறன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News