உள்ளூர் செய்திகள்

குன்றத்தூரில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் மாணவன் பலி

Published On 2022-06-11 14:03 IST   |   Update On 2022-06-11 14:03:00 IST
  • மணிமாறன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹாலில் தூங்கச் சென்றார். வீட்டின் படுக்கை அறையில் தீபக்கும், விக்னேசும் தூங்கச் சென்றனர்.
  • இறந்த பள்ளி மாணவன் தீபக் உடலை மீட்டு அதனை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூந்தமல்லி:

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் 3- வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகன் தீபக் (15) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் தீபக், தனது தம்பி விக்னேசுடன், கடந்த வாரம் குன்றத்தூர் மணிகண்டன் நகர், இந்திராகாந்தி தெருவில் உள்ள தனது பெரியப்பா மணிமாறன் வீட்டிற்கு வந்தான்.

நேற்று இரவு மணிமாறன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹாலில் தூங்கச் சென்றார். வீட்டின் படுக்கை அறையில் தீபக்கும், விக்னேசும் தூங்கச் சென்றனர்.

இரவு திடீரென மணிமாறன் எழுந்து, படுக்கையறைக்கு சென்று பார்த்த போது, அங்கு குழந்தைகள் தூங்குவதற்காக சேலையால் கட்டி வைத்திருந்த தொட்டிலில், கழுத்து இறுக்கிய நிலையில் தீபக் தொங்கிக் கொண்டிருந்தான்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிமாறன், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்து விட்டு, தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த பள்ளி மாணவன் தீபக் உடலை மீட்டு அதனை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News