உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-08-01 12:44 IST   |   Update On 2023-08-01 12:44:00 IST
  • மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருத்தணி:

திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரவீன்குமார் (வயது11). இவர், பொதட்டூர் பேட்டை அருகே உள்ள பாண்டரவேடு கிராமத்தில் உள்ள புனித இதய மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் மாணவன் பிரவீன் குமாருக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாளில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பெற்றோர் பள்ளியில் விட்டு வந்து உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் பிரவீன்குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

விடுதியில் தங்கி படிக்க விருப்ப மில்லாத நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News