உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதி திடீர் மாயம்

Published On 2023-08-18 12:08 IST   |   Update On 2023-08-18 12:08:00 IST
  • விக்டர்ராஜ் என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 937 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு தங்கி இருந்த விக்டர்ராஜ்(24) என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து கியூபிரிவு போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News