உள்ளூர் செய்திகள்

ஒசூரில் சிலம்பாட்ட பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-11-22 12:34 IST   |   Update On 2022-11-22 12:34:00 IST
  • வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கோகுல்நகர், நந்தவனம் லே-அவுட் அருகே வசித்து வருபவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் நாகராஜ் (வயது58). இவர் நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்பிக்க வெளியே சென்றுள்ளார்.

இவரது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் ஒசூர் நகர போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News