வண்டலூர், பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
- பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தாம்பரம்:
கடந்த 12-ந் தேதி தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடு முறையை முடித்துக் கொண்டு தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பல ஊரிலிருந்து சென்னை நோக்கி அதிகப்படியான மக்கள் அரசு பேருந்து தனியார் வாகனங்கள் ஆம்னி பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலையில் வாகனங்களை பிரித்து அனுப்புவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலை ஓரம் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் வண்டலூரில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனங்கள் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றனர்.
போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.