உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விபத்தில் காய்கறி வியாபாரி பலி

Published On 2022-06-06 16:00 IST   |   Update On 2022-06-06 16:00:00 IST
  • சங்கராபுரம் விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.
  • சங்கராபுரம் அருகே விபத்தில் காய்கறி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (40). காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் பூட்டை கிராமத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு ஜவுளி கடையின் இரும்பு கேட் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News