உள்ளூர் செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 918 கிராம் தங்கம், ரூ.87½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது

Published On 2024-04-18 03:51 GMT   |   Update On 2024-04-18 03:51 GMT
  • மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
  • உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

இங்கு மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்த மாதம் 2-வது முறையாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி. எஸ்.பி. இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.87 லட்சத்து 57 ஆயிரத்து 91-ம், 918 கிராம் தங்கமும், 1 கிலோ 644 கிராம் வெள்ளியும், 103 வெளிநாட்டு பணம் மற்றும் 240 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News