உள்ளூர் செய்திகள்
எம்.ஜி.ஆர்.நகரில் டீக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- டீக்கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி கோவிந்தராஜ் அடைந்தார்.
- கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அய்யாவு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது வீட்டின் கீழே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.