உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் ரூ. 3 லட்சம் பணம்-நகை கொள்ளை

Published On 2022-08-19 10:09 GMT   |   Update On 2022-08-19 10:09 GMT
  • கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
  • அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு கடைகளிலும், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆவின் பால் உள்ளிட்ட நான்கு கடைகளிலும் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சூப்பர் மார்க், கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேக்கரி மற்றும் வீடுகளில் 15 சவரன் நகை, உள்ளிட்ட 10 கடைகளில் 3 லட்சம் ரூபாய் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் 3 குழுக்களாக பிரிந்து தனியார் வாகனத்தில் கொள்ளையடித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மர்மநபர்களை இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News