உள்ளூர் செய்திகள்

சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

Published On 2024-03-17 06:35 GMT   |   Update On 2024-03-17 06:35 GMT
  • நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
  • காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் இன்று காலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் சின்னகோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது.

இதுகுறித்து காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News