உள்ளூர் செய்திகள்

ரிப்பன் மாளிகை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

Published On 2022-11-17 08:57 GMT   |   Update On 2022-11-17 08:57 GMT
  • போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர்.
  • அருண் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை:

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே நேற்று நள்ளிரவு 3 இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்தனர்.

ரோந்து போலீசாரை கண்டதும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடினர்.

போலீசார் விரட்டி சென்று புளியந்தோப்பை சேர்ந்த அருண் (18) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தப்பி ஓடிய புளியந்தோப்பை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ் என்கிற தவக்களையை போலீசார் தேடி வருகின்றனர். கைதான அருணிடம் நடத்திய விசாரணையில், சூளை நெடுஞ்சாலையில் சாவியுடன் நிறுத்தி இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags:    

Similar News