உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்- ரெயில்வே அதிகாரியிடம் கோரிக்கை

Published On 2022-07-30 14:44 IST   |   Update On 2022-07-30 14:44:00 IST
  • சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்.
  • மீஞ்சூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொது நவீன கழிப்பறை.

பொன்னேரி:

சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்களில் தினந்தோறும் நெல்லூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர் எண்ணூர் வழியாக வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பயணிகள் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.

ரெயிலில் பயணம் செய்து வரும் பயணிகள் ரெயில் நிலையங்களில் அடிப்படை தேவைகள் குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அத்திப்பட்டு புது நகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான, கழிப்பறை சி.சி.டி.வி. கேமரா, இருக்கை, பார்க்கிங் வசதி, டீஸ்டால், கேன்டீன், மற்றும் கொரோனா தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விடுவது, மீஞ்சூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொது நவீன கழிப்பறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில் பயணிகள் சங்கத்தினர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையாவை சந்தித்து மனுவாக அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News