உள்ளூர் செய்திகள்
பொன்னேரியில் ஒரேநாளில் குழந்தை உள்பட 12 பேரை கடித்து குதறிய வெறிநாய்
- பொன்னேரி நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது.
- வெறி நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. அவை அவ்வப்போது வாகனங்கள் மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்து வருகிறது. வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தேவமா நகர் பகுதியில் சுற்றி வந்த வெறி நாய்கள் நேற்று ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட 12 பேரை விரட்டி, விரட்டி கடித்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.
வெறி நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய்களை பிடிக்க உடனடியாக பொன்னேரி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.