உள்ளூர் செய்திகள்

புங்கனூர்-வெண்டயம்பட்டி இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் தார்சாலை

Published On 2022-07-01 11:36 GMT   |   Update On 2022-07-01 11:36 GMT
  • காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது .
  • சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது .இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து ஒன்றரைகிலோமீட்டர் தூரத்திற்கு மிக மோசமாக குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது. இதனால் இந்த சாலைவழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயம் தொடங்கினால் விவசாய விளை பொருட்களை எளிதில் எடுத்து செல்ல முடியாமல் போய்விடக்கூடும். கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News