உள்ளூர் செய்திகள்

அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

Published On 2023-02-18 16:00 IST   |   Update On 2023-02-18 16:00:00 IST
  • கடையில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
  • தலைமறைவாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது திருடிய ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை பங்கு பிரித்து கொண்டு சென்றது தெரியவந்தது.

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த திருமழிசை, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் பூந்தமல்லி - டிரங்க் சாலை அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் சட்டரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கடையில் வேலை செய்து வந்த திருவள்ளூரை சேர்ந்த ஜேம்ஸ் (21), திருவண்ணாமலையை சேர்ந்த சிவா (22) ஆகியவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது திருடிய ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை பங்கு பிரித்து கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News