உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே தொழிலாளி மாயம்

Published On 2023-07-16 07:55 GMT   |   Update On 2023-07-16 07:55 GMT
  • தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

பொன்னேரி:

பொன்னேரி, அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் அன்சாரி (48). இவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி யாஸ்மின் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News