உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே தொழிலாளி திடீர் மரணம்
- பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் மூலதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் மூலதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது55). கூலித் தொழிலாளி. இவர் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் டீக் கடையில் டீ குடிப்பதற்காக வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.