உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வீடுகளில் ஆடுகளை குறிவைத்து திருடும் கும்பல்

Published On 2022-09-18 15:05 IST   |   Update On 2022-09-18 15:05:00 IST
  • 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
  • கிராமங்களில் வாகனங்களில் வரும் மர்ம கும்பல் வீடுகளில் ஆடுகளை குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த ஆவூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் மதிவாணன், அஸ்வந்த், சீதாபதி.இவர்களது வீடுகளில் இருந்து மொத்தம் 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்னேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாகனங்களில் வரும் மர்ம கும்பல் வீடுகளில் ஆடுகளை குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

Similar News