உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்- பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் போலீசார்

Published On 2022-10-26 08:52 GMT   |   Update On 2022-10-26 08:52 GMT
  • உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆரோக்கிய மேரியை கொண்டு சென்றனர்.
  • ஆரோக்கிய மேரியை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

ஈரோடு:

ஈரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி(38). இவரது கணவர் அற்புதராஜ்.

இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரோக்கிய மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மகன் ஆரோக்கியமேரியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஆரோக்கிய மேரிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஆரோக்கியமேரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் சோதனை செய்த போது மேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு சூரம்பட்டி துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர். மேரி இறப்புக்கான காரணம் சரியாக தெரியவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் வேறு எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேரியுடன் பழகிய நபர் குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News