உள்ளூர் செய்திகள்

இந்து மதம் பற்றி அவதூறு: யூடியூப் சேனல் மீது கமிஷனர் ஆபீசில் புகார்

Published On 2022-10-27 09:47 GMT   |   Update On 2022-10-27 09:47 GMT
  • யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
  • குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை:

பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்தி சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக வீடியோக்களும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் பேசும் நபர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கூறிவருகிறார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் மத மாற்றத்தை தூண்டும் வகையிலும் அதில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே யூடியூப் சேனல் மீதும் அதில் பேசும் நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News