பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்சில் சென்றபோது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் ரூ.1.97 லட்சம் திருட்டு
- நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது70). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று வங்கியில் இருந்து 4½ பவுன் நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
அவர் கடையில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.97 லட்சத்தை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நகைகளை விற்று ரூ.1.97 லட்சம் பணத்தை கைபையில் போட்டு பஸ்சில் வந்தேன்.
அப்போது எனது அருகே பயணிபோல் உட்கார்ந்து கொண்டு வந்த மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.