உள்ளூர் செய்திகள்

காதலர் தினத்தில் தனிமையில் சந்தித்து மாணவியை கற்பழித்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2023-08-15 08:13 GMT   |   Update On 2023-08-15 08:13 GMT
  • கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார்.
  • சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

கோவை:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அன்னூர் பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த பெயிண்டர் சந்திரகுமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி பழகி வந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார். பின்னர் 2 பேரும் அங்குள்ள பழைய கட்டிடத்தில் சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சந்திரகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சந்திரகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News