உள்ளூர் செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-18 12:48 IST   |   Update On 2022-07-18 12:48:00 IST
ஷேர் ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ஒருடன் ரேசன் அரிசி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.

திருவள்ளூர்:

ஆர்.கே.பேட்டைய வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அம்மையார் குப்பத்தில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ஒருடன் ரேசன் அரிசி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதாக காட்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News