உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
- இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.