உள்ளூர் செய்திகள்
- சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென நேதாஜி மீது மோதியது.
- போலீசார் விரைந்து வந்து நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த கருங்குழியைச் சேர்ந்தவர் நேதாஜி (வயது 58). இவர் கருங்குழி பேரூராட்சியில் தொழில்நுட்ப உதவியாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு அவர் கருங்குழி ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென நேதாஜி மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நோதாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து நேதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.