திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- ஜிம் பயிற்சியாளர் பலி
- மோட்டார் சைக்கிள் திடீரென ஜிம் பயிற்சியாளர் சரவணன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சரவணன்(வயது31). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிள் திருவள்ளூரில் இருந்து தண்ணீர் குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென ஜிம் பயிற்சியாளர் சரவணன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த நாகராஜ் (26) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.