உள்ளூர் செய்திகள்
ஜவுளிக்கடை உள்பட இரண்டு கடைகளில் ஷட்டரை உடைத்து பணம் கொள்ளை
- ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை பகுதியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான டிஎன் 24 என்கிற புதிய ஆண்களுக்கான ரெடிமேட் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிரவு புதிதாக திறக்கப்பட்ட ரெடிமேட் ஷோரூம் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் சுரேந்தருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து உடனடியாக ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விரைந்து வந்து சிசிடிவி ஆதாரங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ராயக்கோட்டை சாலையில் உள்ள துளசி பார்மசி மருந்து கடையிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.