உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை குற்றச்சாட்டு எதிரொலி: ஆவின்-சுகாதாரத்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் திடீர் ஆலோசனை

Published On 2022-06-07 16:09 IST   |   Update On 2022-06-07 16:09:00 IST
  • பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டார். கொள்முதல் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
  • குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காகவே ஆவினில் இருந்து வாங்க எடுக்கப்பட்ட முடிவை நிராகரித்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

சென்னை:

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

அதில் இடம் பெற்றுள்ள 'ஹெல்த் மிக்ஸ்' தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் தனியாரை விட குறைந்த விலைக்கு ஆவின் நிறுவனத்தில் வாங்குவதற்கு வல்லுனர் குழு முடிவு செய்துள்ளது.

ஆனால் அந்த முடிவை திடீரென்று நிராகரித்து மீண்டும் பழைய நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டார். இந்த கொள்முதல் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.

குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்காகவே ஆவினில் இருந்து வாங்க எடுக்கப்பட்ட முடிவை நிராகரித்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, "ஆவின் பொருட்கள் ஊட்டச்சத்து நிறைந்தது அல்ல என்றார்.

இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, இன்னும் டெண்டர் உறுதி செய்யப்படாத நிலையில் முறைகேடு எப்படி நடக்கும்? மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்பது பால் மற்றும் டீயில் கலந்து குடிப்பதுதான். அது கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது அல்ல என்றார்.

இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் பிறகு அமைச்சர் நாசர் கூறும்போது, "ஐ.பி.எஸ். படித்த அதிகாரியான அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்" என்றார்.

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துக்களுடன் ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பது ஆவினில் இதுவரை தொடங்கவில்லை.

அவ்வாறு தயாரித்து வழங்க சுகாதாரத்துறை கேட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த ஆய்வு முடிவுகள் வந்து அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே தயாரிக்க முடியும். அதன் பிறகுதான் சுகாதாரத்துறை கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News