உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் பா.ஜனதா காலி பெருங்காய டப்பா- அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கிறார்

Published On 2022-11-14 10:56 IST   |   Update On 2022-11-14 10:56:00 IST
  • தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும்.
  • தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நெற்குப்பை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி ஊராட்சியில் பழமை வாய்ந்த லட்சுமி விலாஸ் செட்டிநாடு இல்லம் உள்ளது. இதன் நூற்றாண்டு விழா நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் அமித்ஷா தமிழ்நாடு வெற்றிடமாக உள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பா.ஜனதா ஒரு காலி பெருங்காய டப்பா. அது எப்போதும் வெற்றிடமாகதான் இருக்கும்.

திராவிட இயக்க அரசு இருக்கும் வரை தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடமே இருக்காது. திமு.க.விற்கு களங்கம் விளைவிக்க பா.ஜனதா நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 6 பேர் விடுதலையானது மனிதாபிமானம் உள்ள செயல். அதனை அனைவரும் வரவேற்றுள்ளதைப்போல் நானும் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 215 சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஓராண்டில் இது ஒரு சாதனைஆகும். தமிழ்நாட்டை டிஜிட்டல் நாடாக கொண்டு வரவே இ-அலுவலக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்துள்ளது, மிகப்பெரிய சாதனைஆகும். ஐ.டி. துறையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News