உள்ளூர் செய்திகள்

தென்காசியில் இருந்து சென்னைக்கு மகளை பார்க்க வந்த வியாபாரி பஸ்சில் மரணம்

Published On 2023-07-08 15:11 IST   |   Update On 2023-07-08 15:11:00 IST
  • பஸ் எர்ணாவூர் அருகே நின்ற போது வெள்ளத்துரை பஸ்சில் படுத்து கிடந்தார்.
  • மருமகன் மோகன் பஸ்சில் ஏறி சென்று பார்த்த போது வெள்ளத்துரை பஸ்சில் பிணமாக கிடந்தார்.

திருவொற்றியூர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 56). பழைய இரும்பு வியாபாரியான இவர் சென்னை எர்ணாவூரில் உள்ள மகள் விஜயராணி வீட்டிற்கு வருவதற்காக நேற்று தென்காசியில் இருந்து தனியார் பஸ்சில் வந்துள்ளார். இன்று காலை பஸ் எர்ணாவூர் அருகே நின்ற போது வெள்ளத்துரை பஸ்சில் படுத்து கிடந்தார்.

உடனே அவரை அழைத்து செல்ல வந்த அவரது மருமகன் மோகன் பஸ்சில் ஏறி சென்று பார்த்த போது வெள்ளத்துரை பஸ்சில் பிணமாக கிடந்தார். உடனே அவரை கீழே இறக்கி சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News