உள்ளூர் செய்திகள்
- கால்நடைகள் புல் திண்ணாமல் தண்ணீர் குடிக்காமல், கண்களில் நீர் வடிந்து, நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- பொன்னேரி கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவ குழுவினர் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூர் கிராமத்தில் விவசாயிகள் ஏராளமான பேர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் புல் திண்ணாமல் தண்ணீர் குடிக்காமல், கண்களில் நீர் வடிந்து, நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பொன்னேரி கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவ குழுவினர் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாடுகளை பரிசோதித்த போது, முன் கழுத்து கழலை நோய், பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.