உள்ளூர் செய்திகள்
- தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
- மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள செங்குன்றம், நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன்(வயது32). மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு பணிக்கு சென்ற அவர் பின்னர் திரும்ப வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை மறைமலைநகர் அருகே உள்ள தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.