உள்ளூர் செய்திகள்

செல்போன் திருடிய வழக்கில் ஒருவர் கைது

Published On 2022-10-10 16:14 IST   |   Update On 2022-10-10 16:14:00 IST
  • கை பையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று விட்டார். அந்த பையில் செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார்.
  • மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 51), இவர் கடந்த 6-ந்தேதி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவரது கை பையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்று விட்டார். அந்த பையில் செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தார்.

இதுகுறித்து பிரபாகரன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் கைப்பை மற்றும் செல்போனை திருடிய வழக்கில் சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த விமல் பாபு (வயது 42), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News