உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் கத்திமுனையில் பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது

Published On 2023-02-07 17:45 IST   |   Update On 2023-02-07 17:45:00 IST
  • மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தர்.
  • விவேகானந்தன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தர் (வயது 55), இவர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், மணிபர்சை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து விவேகானந்தன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது25), தானீஷ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News