சாலை தடுப்பு சுவரில் சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
- இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக்கொண்டு ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் வந்துள்ளார்.
சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இந்தப் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.