உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் லாரி மோதி மின் ஊழியர் பலி

Published On 2022-06-29 11:45 IST   |   Update On 2022-06-29 11:45:00 IST
  • பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த மவுத்தம்பேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(வயது50). இவர் ஆரணி மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்து வந்தார்.

நேற்று மாலை அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பொன்னேரி அடுத்த மேட்டு காலனியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் லாரியில் சிக்கிய யுவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது யுவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News