உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே ஏரிகால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2023-09-12 06:45 GMT   |   Update On 2023-09-12 06:45 GMT
  • தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

பாண்டிச்சேரி, பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 54). கட்டிட தொழிலாளி. இவர் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரி கால்வாயில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி பாலசுப்பிரமணியன் பலியானார். இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News