உள்ளூர் செய்திகள்

வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்- பொதுமக்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள்

Published On 2022-08-08 11:08 GMT   |   Update On 2022-08-08 11:08 GMT
  • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது.
  • பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

சென்னை:

சென்னை தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், தென் இந்திய ஆய்வு கல்வி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓலம்' காணொலியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் எல்.முருகன் பேசியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளில் நம்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ.சி. அவரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.

75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News