உள்ளூர் செய்திகள்

மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

Published On 2022-08-06 12:13 GMT   |   Update On 2022-08-06 12:13 GMT
  • காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை.
  • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துரை (வயது 71). இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News