உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் பொறுப்பு ஏற்பு

Published On 2023-04-28 12:01 GMT   |   Update On 2023-04-28 12:01 GMT
  • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
  • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக (முழு கூடுதல் பொறுப்பு) சு.உமாபதி பதவி ஏற்றார். மேலும் இவர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

உமாபதி ஏற்கனவே காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்), பணியாளர் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாளர், பொது விநியோக திட்ட பொது மேலாளர், காஞ்சிபுரம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மண்டல மேலாளர் போன்ற துணைப்பதிவாளர் பணியிடங்களில் முழு கூடுதல் பொறுப்பில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News