உள்ளூர் செய்திகள்
கல்பாக்கத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
- குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது32) பெயின்டர. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
குழந்தை இல்லாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.