உள்ளூர் செய்திகள்

கோர்ட்டு வளாகத்தில் மனைவியை அடித்த கணவரை கைது செய்ய நீதிபதி உத்தரவு

Published On 2022-06-24 10:40 GMT   |   Update On 2022-06-24 10:40 GMT
  • அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் மனைவி ஜெயலட்சுமி கணவன் வேல்முருகன் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
  • இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி முத்துஇசக்கி உத்தரவிட்டார்.

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது56). இவரது மனைவி ஜெயலட்சுமி (40. இவர்களுக்கு நிவாஸ்(17) என்ற மகன் உள்ளார். வேல்முருகன் கூலி வேலை பார்த்து வருகிறார்

வேல்முருகன் ஜெயலட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவர் வேல்முருகனை 12 வருடங்களாக பிரிந்து செம்பட்டியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் மனைவி ஜெயலட்சுமி கணவன் வேல்முருகன் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என்று நீதிபதி முத்துஇசக்கி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மனைவி ஜெயலட்சுமி வழக்கில் ஆஜராகி முடித்து வெளியே வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த ஜெயலட்சுமியிடம் வேல்முருகன் வாக்குவாதம் செய்து பொதுஇடம் என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி வைத்தனர்.

இதை அறிந்த நீதித்துறை நடுவர் நீதிபதி முத்து இசக்கி நீதிமன்ற வளாகத்தில் மனைவியை தாக்கிய வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கைது செய்து அருப்புக்கோட்டையில் உள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.

Tags:    

Similar News