உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2023-08-11 11:46 IST   |   Update On 2023-08-11 11:46:00 IST
  • மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்.
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகை, செல்போன், ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, செல்போன், ரூ. 12 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

Tags:    

Similar News