மழை காரணமாக மதுரவாயல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
- மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
- சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மழை சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் சாலையில் செல்லத்தொடங்கியதால் நேரம் செல்லச்செல்ல போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றன. அங்கு சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.