உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் சொகுசு காரில் குட்கா கடத்தியவர் கைது

Published On 2022-11-15 15:06 IST   |   Update On 2022-11-15 15:06:00 IST
  • கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து செங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரிய வந்தது.
  • கார் மற்றும் 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேரடி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் காவாகவடா கிராமத்தை சேர்ந்த சங்கர்லால் (24) என்பவரை கைது செய்தனர்.

இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து செங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரிய வந்தது.

கார் மற்றும் 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News