உள்ளூர் செய்திகள்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகாமில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தனர்.
- கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 24) என்பவரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகாமில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.