உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து செல்போன், பணம் திருட்டு

Published On 2023-03-20 12:15 GMT   |   Update On 2023-03-20 12:15 GMT
  • கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.
  • கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கவரைப்பேட்டை:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (வயது 47), விவசாயி. கடந்த 5-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு வழக்கு தொடர்பாக செல்போன் பயன்பாட்டை கண்காணித்து வீடு புகுந்து திருடிய வழக்கில் கொசவம்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி (27), ராஜகோபால் (42) மற்றும் சரவணன் (21) ஆகிய 3 பேரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News