உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சாவுடன் சிக்கிய வடமாநில வாலிபர் கைது

Published On 2022-09-06 12:34 GMT   |   Update On 2022-09-06 12:34 GMT
  • சூப்பிரண்டு அலுவல தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
  • கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் என்பவரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மாவட்ட சூப்பிரண்டு அலுவல தனிப்படை போலீசார், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 24 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவுடன் சிக்கிய ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் (வயது 21) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.

Similar News